தட்டு மாற்றபோன வெங்கடேஷ் குடும்பம்.. தடுத்து நிறுத்திய சண்முகம் - அண்ணா சீரியலில் செம்ம டுவிஸ்ட் வெயிட்டிங்

Published : Dec 06, 2023, 01:58 PM IST

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் ஷண்முகம், பரணி, ரத்னா ஆகியோர் வெங்கடேஷை தேடி வந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
தட்டு மாற்றபோன வெங்கடேஷ் குடும்பம்.. தடுத்து நிறுத்திய சண்முகம் - அண்ணா சீரியலில் செம்ம டுவிஸ்ட் வெயிட்டிங்
Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஷண்முகம், பரணி, ரத்னா ஆகியோர் வெங்கடேஷை தேடி வந்த நிலையில் வெங்கடேஷ் குடும்பத்துடன் பெண் பார்க்க சென்று இருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, பெண் காபி கொடுக்கிறாள். வெங்கடேஷன் நிமிர்ந்து பார்க்கவில்லை, மாப்பிள்ளைக்கு வெக்கம் என்று கிண்டல் செய்கின்றனர். பிடித்திருக்கா என்று வெங்கடேஷனை கேட்க, அம்மா அப்பாவுக்கு பிடிச்சிருந்தா போதும் என்று சொல்ல, ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்க என்று அம்மா அப்பாவை பாராட்டுகின்றனர். 

24
zee tamil Anna serial

பெண்ணுக்கு பிடித்திருப்பதாக சொல்கிறார்கள். மறுபக்கம் காரில் ஷண்முகம் உட்பட எல்லோரும் வந்து கொண்டிருக்க பரணி டென்ஷனில் இருக்கிறாள். ரத்னா மனசு விட்டுபோய் சைலண்டாக பேசாது இருக்கிறாள். மணி பார்த்துக் கொண்டே சீக்கிரம் போங்க என்கின்றனர். சில இடங்களில் அட்ரஸ் விசாரிக்கின்றனர். 

இங்கே ஊர் பெரியவர்கள் பஞ்சாங்கம் பார்த்து தை மாசம் பொங்கல் முடிஞ்சு அஞ்சாவது நாள் அற்புதமான முகூர்த்த நாள் இருக்கு என்கின்றனர். அதே முகூர்த்த நாள்லயே கல்யாணத்த வச்சுக்கலாம் என்று வெங்கடேஷ் அப்பா, அம்மா சொல்கின்றனர். வெங்கடேஷ் எதுவும் சொல்லாது சைலண்டாக இருக்கிறான். பின்ன எதுக்கு யோசிச்சுகிட்டு தட்ட மாத்திட்டு செய்முறை என்ன செய்யனும் யாரு என்ன செலவு பண்ணனுன்னு பேசிக்கங்க என்கின்றனர். முதல்ல தட்ட மாத்திக்கங்க என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Anna serial update

பெரியவர்கள் பேசி தட்டை மாத்த போகின்றனர். நிறுத்துங்க என்று சண்முகம் கத்துகிறான். எல்லோரும் பார்க்க ரத்னா, சண்முகம் மற்றும் பரணி நிற்கின்றனர். வெங்கட் எழுந்து விடுகிறான். யாருப்பா நீ நல்லது நடக்கும் போது அபசகுணமா நிறுத்த சொல்ரே என்று பெரியவர்கள் கோபப்படுகின்றனர். வாத்தியார் ரத்னாவை பார்கிறான். ரத்னா வாத்தியாரை பார்க்கிறாள். 

வெங்கடேஷ் அம்மா அப்பா இப்ப எதுக்கு வந்தீங்க என்று திட்ட, சண்முகம் கோபப்படுகிறான். பரணி அமைதியா இருக்கும்படி சொல்லி வெங்கடேஷிடம் பேச முயல, என்ன பேசுறீங்க, ஏ புள்ள வாழ வேண்டாமா, கல்யாணம் பண்ணி உயிரோட இருக்கனுமா வேண்டாமா, முத்துபாண்டியும் அவ அப்பாவும் என்ன பண்ணினாங்க தெரியுமா என்று வெங்கடேஷ் அம்மா, அப்பா நடந்தவற்றை பேசுகின்றனர். ரத்னாவிற்கு உண்மை புரிய கண் கலங்குகிறாள். 

44
Anna serial today episode

இங்க என் பொண்ணு வாழ்க்கை என்னாகுறது என்று பெண்ணின் அப்பா அம்மா வாக்குவாதம் செய்கின்றனர். அப்பா அவர் என்ன பாக்காம தலைய குனிஞ்சிகிட்டு இருந்தப்பவே எனக்கு ஏதோ இருக்குன்னு தெரியும், மனசில ஒரு பொண்ண நெனச்சுகிட்டு, இருந்தவர் கூட நான் எப்படி வாழமுடியும். எனக்கு அவர் வேண்டாம் என்று சொல்ல, சண்முகம் கை எடுத்து கும்பிடுகிறான்.   

வீட்டுக்கு வந்த பிறகு பொங்கல் முடிந்து ரத்னாவுக்கும் வெங்கடேஷ்க்கும் கல்யாணத்தை வச்சுக்கலாம் என பேசி முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... வெள்ள நீர் அகற்றம்... என்ன அழகா வேலை பார்த்திருக்காங்க...! மாநகராட்சி ஊழியர்களை பாராட்டிய லிங்குசாமி

Read more Photos on
click me!

Recommended Stories