தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி கடையில் இருப்பதை பார்த்த சௌந்தரபாண்டி ஷண்முகத்திடம் சண்டை போட வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
24
zee tamil Anna serial
அதாவது சௌந்தரபாண்டி அவளை கட்டிக்கிட்டு வந்து இப்படி கல்லா பெட்டியில் உட்கார வைத்திருக்க அவ படிச்சதெல்லாம் இதுக்கு தானா என்று சண்டை போட ஷண்முகமும் இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பிறகு பரணி ஷண்முகம் மேல எந்த தப்பும் இல்ல நான் தான் மெடிக்கல் ஷாப் போக வந்தேன் என்று பரணி அங்கிருந்து கிளம்பி செல்கிறாள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
பிறகு வீட்டிற்கு வந்த அவள் தோழிகள் சொன்னது, அம்மா கஷ்டப்பட்டு படிக்க வச்சது போன்ற விஷயங்களை நினைத்து பார்த்து கண் கலங்க வைகுண்டம் என் மருமகளை கடையில் உட்கார வைத்திருக்கான், அவனை இன்னைக்கு சும்மா விட மாட்டேன் என கம்புடன் காத்திருக்க பரணி நடந்த விஷயங்களை சொல்கிறாள். இதனால் வைகுண்டம் இந்த ஒருமுறை சண்முகத்தை மன்னிப்பதாக சொல்கிறார்.
44
Anna serial today episode
அடுத்ததாக பரணி நன்றாக யோசித்து வீட்டிற்கு வந்து நான் ஒரு ஹாஸ்பிடல் கட்ட போறேன், அதுக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.