ஜஸ்ட் மிஸ்... அபிராமியிடம் தப்பித்த தீபாவுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்- கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

Published : Nov 30, 2023, 12:29 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா காபி எடுத்து வர அபிராமியை பார்த்து ஷாக் ஆன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.

PREV
14
ஜஸ்ட் மிஸ்... அபிராமியிடம் தப்பித்த தீபாவுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்- கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்று தீபா காபி எடுத்து வர அபிராமியை பார்த்து ஷாக் ஆனாள். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, தீபா அபிராமியிடம் சிக்க கூடாது என்பதற்காக காபி கொடுக்காமல் வெளியே வர சினேகா அவளை தடுத்து நிறுத்த, தீபா இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக இதெல்லாம் என்னுடைய வேலை கிடையாது, நான் செய்ய மாட்டேன். உங்களால் செய்ய முடிந்ததை செய்துக்கோங்க என ஷாக் கொடுக்கிறாள். 

24
zee tamil Karthigai deepam serial

ஏற்கனவே அபிராமி PA பெயர் தீபா என்பதை கேட்டு டென்ஷனிலும் சந்தேகத்திலும் இருக்கும் சமயத்தில் சினேகா உள்ளே வந்து தீபா காபி கொடுக்க முடியாதுனு சொல்லிட்டா என்று சொல்லி ஏற்றி விட யார் அவ? அவளை பார்க்கணும் என தேடி செல்ல தீபா ஒரு screen பின்னாடி ஒளிந்து கொள்கிறாள். தீபாவை நெருங்கி செல்லும் வேளையில் கார்த்திக் வந்து விட அபிராமி அவனிடம் பேசுகிறாள். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Karthigai deepam serial update

சினேகாவிடம் காபி கொடுத்தீர்களா என்று கேட்க தீபா கொடுக்க முடியாதுனு சொன்ன விஷயத்தை கொளுத்தி போடுகிறாள். திரும்பவும் கார்த்திக் ஒரு மீட்டிங் என கிளம்பி விட அபிராமியும் வீட்டிற்கு கிளம்பி விடுகிறாள். அதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த தீபா மீனாட்சியிடம் நடந்த விஷயங்களை சொல்ல இதையெல்லாம் என்னால் நம்பவே முடியல, நீ வேலைக்கு போற விஷயம் மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான் என பேசி கொண்டிருக்க அங்கு வரும் கார்த்திக் நாளைக்கு நான் டெல்லி போறேன் என்று சொல்கிறான். 

44
Karthigai deepam serial today episode

மறுபக்கம் அபிராமி சாமியாரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க அருணாச்சலம் அதெல்லாம் வந்துடுவார் என சொல்ல சாமியாரும் வந்து விடுகிறார். அவர் கார்த்திகை தீபத்திற்கு விளக்கு போட நேரம் குறித்து விட்டு செல்ல, அபிராமி ஐஸ்வர்யா மற்றும் மீனாட்சியிடம் நாளைக்கு அவர் சொன்ன நேரத்தில் மூன்று பேரும் இங்கே இருக்கனும் என சொல்ல மீனாட்சி அந்த விஷயத்தை தீபாவிடம் சொல்கிறாள். தீபா லீவ் சொல்லி விட்டு வருவதாக கூறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... நெல்சன் முதல் ஆதிக் ரவிச்சந்திரன் வரை.. 2023-ல் தரமான கம்பேக் படங்களை கொடுத்த டாப் 5 தமிழ் இயக்குனர்கள் லிஸ்ட்

Read more Photos on
click me!

Recommended Stories