தமிழக அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய் செல்லும் இடமெங்கும் மக்கள் கூட்டம் திக்குமுக்காடி வருகிறது. இதனால் சில கிலோ மீட்டர் தூரத்தை கடக்கவே பல மணிநேரம் தேவைப்படும் நிலை் உள்ளது. இந்த நிலையில் இன்று கரூரில் தமிழக வெற்றிகழகம் தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் ஏற்பட்ட இந்த சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய தகவல்களின்படி, 35 பேர் உயிரிழந்துள்ளனர். 6 குழந்தைகள், 16 பெண்கள், மற்றும் 9 ஆண்கள் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.