இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஷர்மிளா, ராணிபாத்திமா இருவரும் சேர்ந்து விஜய்யை உருட்டுக்கட்டையாலும், கம்பியாலும் தாக்கியுள்ளனர். மேலும் அவரது கழுத்தை கயிற்றால் கட்டி, ஜன்னல் கம்பியில் இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் தூக்குபோட்டு கொண்டதாக நாடகமாடியுள்ளனர். ஷர்மிளாவுக்கு மேலும் பலருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.