கரூர் விபத்தை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தரப்பில் 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பாக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தவெக தலைவர் விஜய், தனது சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கரூரில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை தேமுதிக தலைவர் பிரேமலதா உள்ளிட்டவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது மட்டுமில்லாமல் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.