சவுக்கு சங்கர் என்று அறியப்படும் இவரின் இயற்பெயர் ஆச்சிமுத்து சங்கர். இவரின் தந்தை ஆச்சிமுத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். திருநெல்வேலியில் பிறந்து, திருச்சியில், தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களில் சில காலம் படித்து, சென்னையில் குடியேறினார். 10ம் வகுப்பு படித்திருந்த போது 1991ம் ஆண்டு ஜூன் மாதம் தந்தை மறைவிற்குப் பிறகு கருணை அடிப்படையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை பணியில் சேர்ந்தார். இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.