அதில், தமிழக தேர்தல் களம் வழக்கமான இருமுனைப் போட்டியில் இருந்து நகர்ந்து, இன்று ஒரு மும்முனைப் போட்டியாக (சில இடங்களில் நான்கு முனை) உருவெடுத்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு புதிய வரவு ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது என்றால் அது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் வருகைதான். அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய விவாதம், "விஜய் யார் ஓட்டைப் பிரிப்பார்?" என்பதுதான்.