School Reopen: மழை பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பது எப்போது? வெளியான முக்கிய தகவல்!

Published : Dec 03, 2024, 05:13 PM ISTUpdated : Dec 03, 2024, 05:23 PM IST

School Reopen: ஃபெங்கல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

PREV
15
School Reopen: மழை பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பது எப்போது? வெளியான முக்கிய தகவல்!
Cyclone Fengal

 ஃபெங்கல் புயல் காரணமாக தமிழக அரசு சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் போக்கு காட்டி வந்த புயல் மரக்காணம்- மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. சென்னையில் மழை குறைந்த நிலையில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. இதனால், கடந்த சில நாட்களாக மழையால் பாதிக்கப்பட்ட மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

25
School Holiday

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள தடாகம் உள்ளிட்ட இன்னும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. இதனால் பள்ளிகள் எப்போது திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: Tamilnadu Weather: என்னது! மீண்டும் மிரட்டப்போகிறதா கனமழை? வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

35
Anbil Mahesh

இதுதொடர்பாக தமிழக அரசு  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

45
Tamilnadu Rain

இன்று பிற்பகல் 3 மணியளவில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின்  தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

இதையும் படிங்க:  எமன் ரூபத்தில் வந்த அரசு பேருந்து! மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் உடல் நசுங்கி பலி! நடந்தது என்ன?

55
School Reopen

இந்த ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் நாளை திறக்கப்படுமா? இல்லை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? என்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories