மீனவர்கள் வரும் 21-ஆம் தேதி காலைக்குள் ஆழ்கடலில் இருந்து கரை திரும்ப வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக கடலோரம், லட்சத்தீவு, கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். வரும் 6 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, நாளை, தீபாவளியன்று வட கிழக்கு தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 23 முதல் 25-ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.