எனவே, அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, வரும் 22-ஆம் தேதி (புதன்கிழமை), தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் விநியோகத்தை நிறுத்திப் போராட்டம் நடத்த உள்ளோம். மேலும், அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
நாங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தப் போராடி வரும் இந்தச் சூழ்நிலையில், ஆவின் மூலம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ரூ.210 மதிப்பிலான 250 கிராம் பால்கோவாவை நிர்பந்தத்தின் அடிப்படையில் வசூலிப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.