இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் கரு.பிரபாகரன்: நாம் தமிழர் கட்சியில் சேரும்போது செல்வந்தர்களாக இருந்தோம். கட்சி, பொதுக்கூட்டம், நிர்வாக செலவுகளுக்காக அவற்றை இழந்து இன்று தினக்கூலிகள் ஆகிவிட்டோம். பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளோம். ஆனால், திமுக, அதிமுகவினர் உள்பட பணம் படைத்தவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தான் சீமான் செல்கிறார். எங்களை மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுகுமார் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.