மாணவர்களுக்கு குஷியான செய்தி.! தனியார் பள்ளிகளுக்கு லாஸ்ட் சான்ஸ் - தமிழக அரசு அதிரடி

First Published Oct 3, 2024, 9:09 AM IST

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனையடுத்து அந்த பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் வந்துள்ளது. 

school student

தமிழக அரசின் மாணவர்களுக்கான திட்டங்கள்

தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் கல்வி பயிலும்  மாணவர்கள் தங்கள் கல்வியை தொடரவும் பொருளாதாரம் மற்றும்  சமூக காரணங்களால் பள்ளி படிப்பை இடையில் நிற்கும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவர்கள் தடையின்றி பள்ளிக்கு வருவதற்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரைவிலான மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை கொண்டு செல்லும் வகையில் இலவசமாக புத்தக பையும்,  மாணவ மாணவிகளுக்கு காலணிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

School Student

அரசு உதவி திட்டங்கள்

மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயிலும் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு  புவியியல் வரைபடமும் வழங்கப்படுகிறது. மேலும் கிரையன்கள், வண்ண பென்சில்கள்,  கணித உபகரண பெட்டிகள்,  மழையின் காலத்தில் தற்காத்துக் கொள்வதற்காக ரெயின் கோட், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 இது மட்டும் இல்லாமல் நீண்ட தூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வசதியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம்  வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் வழங்கப்படுகிறது.  மேலும் மாணவர்களுக்காக விலையில்லா பேருந்து பயண அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல உதவித்தொகை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.  

Latest Videos


school student

பள்ளியின் வேலை நாட்கள்

அரசு மற்றும் அரசு உதவி பெரும்பள்ளியில் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தலா 1500 ரூபாயில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் 2000 ரூபாயில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யப்படுகிறது. மாணவர்கள் கல்வி படிப்பை முடிக்கும் பொழுது அத்தொகையானது  வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தொடக்கத்தில் நடப்பு ஆண்டு வேலை நாட்களுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டது.

அதன் படி பெரும்பாலான சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் படி மொத்தமாக 220 நாட்களுக்கு பள்ளிகளின் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படுவதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து 210 நாட்களாக பள்ளியின் வேலை நாட்கள் மாற்றி அமைக்கப்பட்டது.

school student

காலாண்டு விடுமுறை- சிறப்பு வகுப்புகள்

இந்தநிலையில் காலாண்டு தேர்வானது தமிழகம் முழுவதும் கடந்த மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விடுமுறையானது 3 நாட்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து 10 நாட்களாக காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. அதன் படி அக்டோபர் 3ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காமல் சிறப்பு வகுப்பானது நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை, நெல்லை, மதுரை. நாகர்கோவில், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசின் உத்தரவை மதிக்காமல் பள்ளிகள் செயல்பட்டது.மேலும் ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்பட்டது.

தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறைக்கு  புகார் சென்றுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பார் செய்யப்பட்டு வருவதாக கூறினார். எனவே ஒரு சில நாட்களில் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு உத்தரவை மீறி செயல்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது தொடர்பாக பள்ளியின் பட்டியல் தயாப்பி விளக்கம் கேட்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.  

click me!