தொடர்ந்து தவெகவினர் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசிய விஜய், ''மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை மட்டுமே வெற்றியைத் தந்துவிடாது. என்னோடு பயணிக்கும் உங்கள் ஒவ்வொருவர் மீதும் மக்களுக்கு அந்த நம்பிக்கை வர வேண்டும்.
உங்களிடம் நம்பிக்கை இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அந்த நம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. தயவுசெய்து அனைவரும் வேற்றுமைகளை மறந்து, ஓரணியில் இணைந்து உழைத்து வெற்றியை ஈட்டுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.