தவெக செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று (ஜனவரி 25) நடந்தது. இந்த கூட்டத்தில் அனல்பறக்க பேசிய தவெக தலைவர் விஜய், எந்த வித அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்தார்.
இது குறித்து பேசிய விஜய், ''எத்தனை அழுத்தங்கள் என் மீது திணிக்கப்பட்டாலும் எதற்கும் அடங்கிப்போகவோ, யாருக்கும் அடிமையாகவோ, எவரையும் அண்டிப் பிழைக்கவோ நான் அரசியலுக்கு வரவில்லை. எந்த அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டேன்'' என்று தெரிவித்தார்.