நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்த நிலையில், இன்றும் பல மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.