மாநாடு அனுமதி கிடைப்பதில் தாமதம்
அந்த வகையில் செப்டம்பர் மாதம் மாநாட்டை நடத்த பணிகள் தொடங்கிய நிலையில் காவல்துறை அனுமதி கிடைப்பது காலதாமதம் ஏற்பட்டதால் திட்டமிட்ட காலத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையின் பல்வேறு நிபந்தனைகள் விதித்து மாநாட்டிற்கு அனுமதி கிடைத்தது. அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என புதிதாக தேதி அறிவிக்கப்பட்டது.
அதன் படி இன்று மாலை நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். எனவே நடிகர் விஜய்யின் அரசியல் திட்டம் என்ன.கொள்கை என்ன? கொடியில் இடம்பெற்று இருக்கும் யானை மற்றும் பூக்கள் எதை குறிக்கிறது என்பது தொடர்பாக இன்று விளக்கம் அளிக்கவுள்ளார்.