எனவே தவெக மாவட்ட செயலாளர்களிடம் விஜய் நேரடியாக பேசி வருவதாகவும், யாரும் முடங்கிவிட வேண்டாம் என தெரிவித்திருந்தாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோகாலில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமாரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய்,
உயிரிழந்தவரின் தங்கையிடம் அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன் எனவும் உறுதியளித்துள்ளார். நடக்கக்கூடாதது நடந்து விட்டது, எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். இதே போல பாதிக்கப்பட்ட மற்ற மக்களிடமும் வீடியோ காலில் சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை விஜய் பேசி ஆறுதல் கூறியுள்ளார்