தேர்தல் புறக்கணிப்பு- வைகோவின் முடிவு
அரசியல் கட்சியின் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை எதிர்பார்ப்பது தேர்தலை தான். ஆனால் ஒரு அரசியல் கட்சியாக இருந்து சட்டமன்ற தேர்தலையே புறக்கணிப்பதாக தவறான முடிவை எடுத்தார். இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் திமுகவிடமே மீண்டும் சென்றனர். ஒரு கட்டத்தில் திமுகவிடமே கூட்டணியையும் வைகோ வைக்கும் நிலை உருவானது. இந்தநிலையில் வயது முதிர்வு காரணமாக பாதிக்கப்பட்ட வைகோ பெரும்பாலான அரசியல் நிகழ்வுகளை தவிர்த்து வந்தார்.