அதன்படி அவசர சிகிச்சைகள் தவிர்த்து அனைத்துவிதமான மருத்துவ சேவைகளையும் மேற்கொள்வதில்லை என தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகியவை தமிழகத்தில்உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகளில் நிறுத்தப்படும்.