வெளியூரில் பணி- ஆசிரியர்கள் தவிப்பு
எனவே தங்களுக்கு சொந்த மாவட்டத்தில், சொந்த ஊரில் பணி கிடைக்காதா என ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஏங்கி காத்துள்ளனர். அந்தவகையல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு இடமாறும் கலந்தாய்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் வட்டாரம், மாவட்டம் அளவில் தங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு ஆன்லைன் வழியாக நடத்தப்படும் கலந்து கொண்டு பயன் பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் இதே போல அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டது