இன்பநிதிக்காக பெண் கலெக்டரை அவமானப்படுத்திய உதயநிதி! 2011 நினைவிருக்கட்டும்! அண்ணாமலை வார்னிங்!

Published : Jan 16, 2025, 07:01 PM ISTUpdated : Jan 16, 2025, 07:03 PM IST

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில், உதயநிதி ஸ்டாலின் தனது மகன் மற்றும் நண்பர்களை அமர வைக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை மேடையிலிருந்து அகற்றியதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

PREV
14
இன்பநிதிக்காக பெண் கலெக்டரை அவமானப்படுத்திய உதயநிதி! 2011 நினைவிருக்கட்டும்! அண்ணாமலை வார்னிங்!
Udhayanidhi stalin

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை காண இன்பநிதி மற்றும் அவரது நண்பர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை கூறியுள்ளார். 

24
Annamalai

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

இதையும் படிங்க: அரசியலில் களம் இறங்கும் இன்பநிதி.? அடுத்த வாரிசை அறிமுகம் செய்ய திட்டமிடும் திமுக தலைமை

34
inbanidhi

துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம். 

இதையும் படிங்க:  தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

44
DMK

முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்? துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள் என அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories