தூத்துக்குடி-தாம்பரம்
இதேபோல் தூத்துக்குடி-தாம்பரம் இடையே வரும் 19ம் தேதி அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதாவது தூத்துக்குடியில் 19ம் தேதி மாலை 4.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயில் தூத்துக்குடி மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல்,மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
முன்பதிவு கொண்ட இந்த ரயிலில் 7 மூன்றாம் அடுக்கு ஏசி பெட்டிகள், 4 சாதாரண படுக்கை வசதி பெட்டிகள், 1 முன்பதிவில்லாத பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.