கரூருக்கு நேரில் செல்ல தேதி குறித்த விஜய்.! டிஜிபிக்கு சென்ற தவெகவின் முக்கிய கடிதம்

Published : Oct 08, 2025, 10:26 AM IST

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறினார். கரூருக்கு நேரில் செல்ல பாதுகாப்பை வழங்கக் கோரி தமிழக டிஜிபிக்கு தவெக சார்பில் கடிதம்

PREV
14

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து களம் இறங்கியுள்ளார். அந்த வகையில் இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். இந்த மாநாட்டில் பல லட்சம் இளைஞர்கள் குவிந்து தங்களது ஆதரவை விஜய்க்கு வெளிப்படுத்தினர். இதனையடுத்து மக்களை சந்திக்கும் வகையில்,

 உங்கள் விஜய்.. நா வாரேன் என்ற தலைப்பில் மக்களை சந்திக்கும் வகையில் திட்டமிட்டார். இதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரச்சார பேருந்தில் சென்று மக்களை சந்தித்து பேசினார். அந்த வகையில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் போன்ற இடங்களில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை சிறப்பாக நடத்தி முடித்தார்.

24

இதனை தொடர்ந்து நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டமானது நிரம்பி வழிந்தது. மதியம் 12 மணிக்கு விஜய் வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 7 மணிக்கே கரூர் பகுதிக்கு வந்தடைந்தார். 

இதன் காரணமாக காலையில் இருந்து வெயிலில் நின்று கொண்டிருந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் நெரிசலில் மூச்சு திணறி 41பேர் பலியானர்கள். இந்த சம்பவம் நடைபெற்றதையடுத்து தவெக தரப்பில் போலீசார் மீது குற்றம்சாட்டப்பட்டது. போதிய இடம் வசதி தரவில்லையென குற்றம்ச்ட்டப்பட்டது.

34

அதே நேரம் விஜய்யின் காலதாமதமான வருகை தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என விமரிச்க்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் துய சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தவெக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து எந்தவித ஆறுதலும் தற்போது வரை கூறவில்லை. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பபத்தாரோடு வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்திருந்தார். நடக்க கூடாத சம்பவம் நடைபெற்று விட்டதாகவும் ஆறுதல் கூறினார். விரைவில் நேரில் வந்து சந்திப்பதாகவும் உறுதி கொடுத்திருந்தார். 

44

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல பாதுகாப்பு கேட்டு தமிழக டிஜிபிக்கு தவெக தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மின்னஞ்சல் வழியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில்,

இன்று டிஜிபியை நேரில் சென்று சந்தித்து கடிதம் அளிக்க இருப்பதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ் செய்தியாளர்களிட்ம கூறுகையில், நேற்று விஜய் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசினார். அப்போது எல்லோரும் உங்கள் மீது தவறும் இல்லை. நீங்கள் தைரியமாக இருங்கள். விடாதீங்க, தொடர்ந்து பைட் செய்யுங்கள். உங்களுடன் நாங்கள் இருப்போம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விஜய் கரூர் செல்வதற்காக தேவையான பாதுகாப்பு தொடர்பாக ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த காவல்துறையிடம் கேட்டுள்ளோம். எனவே பாதுகாப்போடு மக்களை விஜய் சந்திப்பார் என அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories