தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அக்கட்சியின் தலைவர் விஜய், அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கி செல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சி சார்பில் இன்று விமரிசையாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தொடக்க விழாவை முன்னிட்டு கட்சியின் தலைவர் விஜய் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைவர் விஜய் கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், “நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.
23
அரசியல் பயணத்திற்கு முன்பே மக்களுக்காக நின்றவர்கள் நாம்..
முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க.
33
தவெக வருகையால் இதுவரை இல்லாத சூழல்
2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்.