முதலுதவிக்குப் பிறகும் அவர் இயல்பு நிலைக்குத் திரும்புவதில் சிரமம் இருந்ததால், உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உடல் நலம் விசாரித்த ஸ்டாலின், உதயநிதி
இந்த நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எச்.ராஜா குடும்பத்தினரிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், எந்த உதவி கேட்டாலும் அரசு செய்து தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும் முதல்வர் கேட்டறிந்தார்.