இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தவெக தலைவர் விஜய் பேசுகையில்: அண்ணா அக்கா தங்கைகள் நண்பா நம்பிகள் என அனைவரும் கொடுக்கும் ஆதரவை கெடுக்க அவதூறுகள் பரப்பப்படுகிறது. அவதூறை நம்பி சிலர் பிழைப்பை நடத்துகின்றனர். எனது 10 வயது முதல் தமிழக மக்களின் மக்களுடன் உள்ள தொடர்பு யாராலும் கெடுக்க முடியாது.
உங்களை நம்பி தான் வந்துள்ளேன் என்னுடன் வாழ்நாள் முழுவதும் நிற்பீர்களா என தொண்டர்களை நோக்கி விஜய் கேள்வி எழுப்பினார். உங்களுடன் நிற்போம் என விஜய் சூழ்ந்துள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பதில் கூறி முழக்கமிட்டனர். மக்கள் என்னை ஒருநாளும் கைவிட மாட்டார்கள் என்றார்.மக்களுக்கு எதுவுமே செய்யாமல் கதைகளை மட்டுமே அடித்து விடுகின்றனர். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?