உம்ரா புனித யாத்திரை மேற்கொண்டிருந்தவர்கள் மெக்காவில் இருந்து மதீனாவிற்கு சென்றபோது பேருந்தும் டீசல் லாரியும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் தீப்பற்றி எரிந்து நாசமானது.
பல பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்துள்ளது. இதனால், பேருந்தில் தீப்பற்றியதும் உடனடியாக தப்பிக்க முடியவில்லை. இதனால் உயிரிழப்பும் அதிகரித்தது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் இந்த விபத்தில் இறந்துவிட்டனர். மற்றொரு குடும்பத்தில் 5 பேர் இந்த விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். இதனை அவர்களின் உறவினர்கள் உறுதிசெய்துள்ளனர்.