"அன்று சாத்தான்குளம் பெனிக்ஸ், ஜெயராஜ் வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது, அது மாநில அரசுக்கு அவமானம்னு சொன்னீங்க ஸ்டாலின். இன்று அஜித்குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றியது அவமானம் என்றால் அஜித்குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றியது அவமானம் இல்லையா?
சிபிஐ ஆர்எஸ்எஸ், பாஜகவின் கைப்பாவையாகத்தான் செயல்படுகிறது. அஜித்குமார் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்து நீங்களும் ஏன் அவர்கள் பின்னால் போய் ஒளிந்துகொள்கிறீர்கள்.
நடக்கக் கூடாதது எது நடந்தாலும் அதிகபட்சமாக முதல்வரிடம் இருந்து “சாரி” என்ற பதில்தான் வருகிறது. திமுக அரசு நிர்வாகத் திறனற்று இருக்கிறது. இந்த வெற்று திமுக ஆட்சி திராவிட மாடல் அரசு அல்ல, ‘சாரி மா’ மாடல் ஆட்சி.
எல்லாவற்றுக்கும் நீதிமன்றம்தான் தலையிட்டு கேள்வி கேட்கிறது. சாத்தான்குளம் வழக்கு, அண்ணா பல்கலை வழக்கு, அஜித்குமார் வழக்கு என நீதிமன்றம்தான் தலையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. எல்லாவற்றிலும் நீதிமன்றம்தான் தலையிட வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு சி.எம். சார்? உங்க ஆட்சி எதுக்கு சார்?" என்றும் தவெக தலைவர் விஜய் பேசினார்.