இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் நேற்று சுட்டெரித்து வந்த நிலையில் மாலை நேரத்தில் சென்னை, புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து, திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. போரூர், கிண்டி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, அண்ணாநகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, அடையாறு, எழும்பூர், பெரம்பூர், எண்ணூர், மணலி, கொடுங்கையூர், மாதவரம், புரசைவாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால், வேலை முடிந்து திரும்பிய வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.