தமிழ்நாட்டில் நம்பர் ஒன் நடிகராக கலக்கி வந்த விஜய், அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது, பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை, தனது பனையூரில் உள்ள அலுவலகத்தில் செய்து வந்தார். இதன் அடுத்த கட்டமாக கடந்த வருடம் விக்கிரவாண்டியில் ஒரு மாநாட்டையும், கடந்த மாதம் மதுரையில் ஒரு மாநாட்டையும் நடத்தி, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
தற்பொழுது பொதுமக்கள் அதிகம் கூடும் வீதிகளில் வலம் வந்து, பொதுமக்களை நேரடியாக சந்தித்து, தனது எண்ண ஓட்டங்களை எடுத்துக் கூற உள்ளார். இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்குபுறப்பட்டுள்ளார். இதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை 8 10 மணிக்கு புறப்பட்ட விஜய், 8: 40 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.