மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வேண்டும் என இபிஎஸ் பேசியதற்கு, தாம் அளித்த விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமியின் வன்னியர் உள் ஒதுக்கீடு அரசியலால் தென் தமிழகத்தில் சமூக அமைதி கெட்டது. அதனடிப்படையில் நான் சொன்ன கருத்தை தவறாக பிரிந்து கொண்டு சிலர் தூண்டப்பட்டு செயல்பட்டுள்ளார்கள். தேர்தல் வெற்றிக்கு அப்பாற்பட்டு சமரசம் இன்றி தமிழகம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். தேர்தல் நேரத்தில் இபிஎஸ் அரசியல் செய்வதையே சுட்டிக்காட்டினேன் என விளக்கமளித்தார்.