இதமான வானிலையோடு கொட்டும் தண்ணீர்
இந்தநிலையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் பெய்த மழையால் குற்றால அருவியில் இதமான சூழல் நிலவுகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமான அளவு கொட்டுகிறது. தற்போது தென்காசி மாவட்டம் மற்றும் வனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் இன்னும் ஒரு வாரத்திற்கு குற்றால அருவியில் தண்ணீர் வரும் என குற்றாலவாசிகள் தெரிவித்துள்ளனர்.