குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு
இந்தநிலையில் தான் கடந்த 10நாட்களாக தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தென் மாவட்டங்களில் ஏரி, அணைகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது. மேலும் குற்றாலத்தில் உள்ள அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.
இதனால் உற்சாகமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆட்டம் போட்ட நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சிறுவன் ஒருவனின் உயிரை பலி வாங்கியது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.