இன்றைய TOP 10 செய்திகள்: பாரத மாதா நாணயம் முதல் அமெரிக்க அரசு முடக்கம் வரை!

Published : Oct 01, 2025, 11:07 PM IST

பாரத மாதா உருவம் பதித்த ரூ.100 நாணயம், மத்திய அரசின் அகவிலைப்படி 3% உயர்வு, அமெரிக்க அரசு முடக்கம், விஜய் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு உள்ளிட்டவை இன்றைய TOP 10 செய்திகளில் உள்ளன.

PREV
110
பாரத மாதா நாணயம்

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று (நாள் குறிப்பிடவும்) ஒரு சிறப்பு ரூ.100 நாணயம் மற்றும் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை ஏற்படுத்தினார்.

இந்தச் சிறப்பு நாணயம், இந்திய நாணயவியலின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்திய நாணயத்தில் 1947-க்குப் பிறகு பாரத மாதா உருவம் இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

210
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வருவதால், மொத்த அகவிலைப்படி 58% ஆக உயர்ந்துள்ளது.

310
விஜய் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த வாரம் அவர் கரூரில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், விஜய்யின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தவெக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

410
பாயிண்டை பிடித்த செந்தில் பாலாஜி

கரூர் கூட்ட நெரிசலில் கத்திகுத்து சம்பவம் நிகழ்ந்ததாக வதந்தி பரவிய நிலையில், அது குறித்து செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கூட்டத்துக்குள் யாரோ ஒருவர் இன்னொருவரை கத்தியால் குத்திவிட்டார் என சமூகவலைதளத்தில் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

510
தமிழகத்துக்கு ரூ.4,144 கோடி

தமிழகத்துக்கு ரூ.4,144 கோடி வரி பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது. உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவுக்கு ரூ.1,956 கோடி வரி பகிர்வு ஒதுக்கப்பட்டுள்ளது.

610
அமெரிக்க அரசு முடங்கியது

அமெரிக்க செனட் சபையில் செலவினங்கள் தொடர்பான மசோதா நிறைவேற்றப்படாத காரணத்தினால், அமெரிக்க அரசு முடங்கியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் அமெரிக்கா "ஷட் டவுன்" ஆவது இதுவே முதல்முறையாகும். அத்தியாவசிய ஊழியர்களைத் தவிர மற்ற அனைத்து பெடரல்) அரசு ஊழியர்களும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த நிதியாண்டிற்கான அரசின் செலவினங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் நிதி மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இந்த இடைக்கால நிதி மசோதாவுக்கு மேல்சபையான செனட்டில் இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.

710
இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் காரணமாக அமெரிக்கா இந்தியா மீது கூடுதல் வரிகளை விதித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் நெருக்கமடைந்து வரும் சூழ்நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.

810
மோஷின் நக்வியின் தெனாவட்டு பதில்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கோப்பையை வழங்குவதில் ஏற்பட்ட சர்ச்சைகள் தொடரும் நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவருமான மோஷின் நக்வி இன்று (புதன்கிழமை) ஒரு அதிரடியான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

"இந்திய அணிக்கு கோப்பை தேவை என்றால், துபாயில் உள்ள ஏசிசி அலுவலகத்திற்கு வந்து என்னிடம் பெற்றுக் கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

910
எலான் மஸ்கின் சேட்டை!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், விக்கிபீடியாவுக்கு மாற்றாக 'க்ரோகிபீடியா' (Grokipedia) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தளத்தை தனது xAI நிறுவனம் மூலம் உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மஸ்க், "நாங்கள் xAI மூலம் க்ரோகிபீடியாவை உருவாக்கி வருகிறோம். இது விக்கிபீடியாவை விட மிகப்பெரிய வளர்ச்சி கொண்டதாக இருக்கும். வெளிப்படையாகச் சொல்வதானால், பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற xAI-இன் இலக்கை நோக்கிய ஒரு முக்கியமான பணி இது" என்று குறிப்பிட்டுள்ளார்.

1010
டெல்லிக்கு பறக்கும் ஆதவ் அர்ஜுனா

தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கரூர் சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் அதை அவரே டெலிட் செய்தார். ஆனால், அந்தப் பதிவு தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் திடீரென டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories