கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் இந்த கூட்ட நெரிசல் சம்பவம் விபத்தா.? அல்லது வேறு ஏதேனும் சதியா என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பவ நடைபெற்ற போது உடனடியாக செந்தில் பாலாஜி அந்த பகுதிக்கு சென்றது எப்படி என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், கரூரில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்ட உடனே மருத்துவமனைக்கு போனது எப்படி என கேள்வி கேட்கிறார்கள்.