பொய் முகத்தால் பி** ண வாடையை அமுக்க முடியாது..! விஜய் முகத்தில் ஓங்கி அடித்த முரசொலி

Published : Oct 01, 2025, 03:32 PM IST

விஜய் பங்கேற்ற கரூர் கூட்டத்தில் 41 பேர் பலியானதற்கு, விஜய்யின் பொறுப்பற்ற தன்மையும், திட்டமிடல் பிழைகளுமே காரணம் என திமுகவின் முரசொலி நாளிதழ் குற்றம் சாட்டியுள்ளது.பல மணி நேர தாமதம் மூச்சுத்திணறலுக்கு வழிவகுத்தது என்றும் அது விளக்கியுள்ளது.

PREV
17

தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் சிக்கி 41 பேர் சிக்கி பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், திமுகவின் நாளிதழான முரசொலி பதிலடி கொடுத்துள்ளது. முரசொலி தலையங்கத்தில் கேள்வி பதில் வடிவத்தில் வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் விஜய்யின் பொறுப்பற்ற தன்மை காரணமாக 41 உயிர்கள் பலியானது அதனை மறைக்க பல்வேறு வதந்திகளை ஊடகங்களில் பரப்பி வருகிறார்கள். அதில் முக்கியமானது மின்சாரத்தை துண்டித்தார்கள் என்பது ஆகும்.

மின்சாரம் துண்டிக்கப்படவில்லை” என்று மின் வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி சொல்லி இருக்கிறார். "விஜய் பிரச்சாரத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. விஜய் வருவதற்கு முன்பு டிரான்ஸ்பார்மரிலும், மரத்திலும் சிலர் ஏறியதால் மின்சாரத்தை துண்டித்து, காவல் துறை மூலம் அவர்களை கீழே இறக்கிய பின்னர் மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது" என்று விளக்கம் அளித் துள்ளார்.

27

காவலர்கள் இல்லை, போலீஸ் பாதுகாப்பு முறையாகச் செய்து தரப் படவில்லை என்பது அடுத்ததாகச் சொல்லப்படுவது ஆகும். விஜய் பேச ஆரம்பித்த போது காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறி நன்றி தெரிவித்தார். காவல்துறை சரியான ஏற் பாடுகள் செய்யவில்லை என்றால் விஜய் அப்படி சொல்லி இருப்பாரா?

கரூரில் விஜய் வருகைக்கு 10 ஆயிரம் பேரை எதிர்பார்ப்பதாகச் சொல்லி அனுமதி பெறப்பட்டது. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கொடுத்த விண்ணப்பத்தில் 10 ஆயிரம் தொண்டர்கள்தான் வருவார் கள் என்று எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் பிரச்சாரக்கூட்டத்திற்கு சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். 

திருச்சி, நாகப்பட்டி னம், திருவாரூரில் ஏற்கனவே கூடிய கூட்டத்தை கருத்தில் கொண்டு SPI ADSP2 DSP4 மற்றும் Inspectors 17 பேர் உள்பட சுமார் 500 காவலர்கள் இருந்தார்கள். பொதுவாக பொதுக்கூட்டத்துக்கு 50 பேருக்கு ஒரு காவலர் என்று நிறுத்தப்படுவார்கள். கரூர் நிகழ்ச்சிக்கு 20 பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் நிறுத்தப்பட்டார்கள்.

37

விண்ணப்பத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நேரம் கேட்டிருந்தனர். ஆனால் அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ தளத்தில் 12 மணிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் காலை 11 மணி முதல் கூட்டம் கூடியது. ஆனால் இரவு 7.10 மணிக்குத்தான் விஜய் வந் தார். முப்பது நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை இரண்டு மணி நேரம் தாமதம் ஆகும் வகையில் மெதுவாகக் கடந்தார் விஜய் இது கூட்டத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

பரப்புரை கூட்டம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் என்ற இடம். கரூர் ஈரோடு சாலையில் அமைந்துள்ளது. அவர்கள் கூட்டம் நடத்த முன்னதாக கேட்ட உழவர் சந்தை மற்றும் லைட்ஹவுஸ் ரவுண் டானா என்ற இரண்டு இடங்களும் இதைவிட குறுகலான இடங்கள் என்பதால் வேலுச்சாமிபுரத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட டது. லைட் ஹவுஸ் பகுதியில் பெட்ரோல் பங்க இருக்கிறது. அமராவதி பாலமும் இருக்கிறது. விஜய் கட்சி கேட்ட இடத்தை கொடுத்திருந்தால் இன்னும் நிலைமை மோசமாகி இருக்கும்.

47

வரவேற்பு கொடுத்த இடத்தில் இருந்து அவரது ரசிகர்கள், தொடர்ந்து வாகனத்தை பின் தொடர்ந்து வந்ததால் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. பேச வேண்டிய இடத்துக்குள் நுழைய முடியாத அளவுக்கு கூட்டம் இருப்பதால், பிரச்சார இடத்துக்கு முன்பே வாகனத்தை நிறுத்தி பேசும் படி போலீஸார் கூறியுள்ளனர். ஆனால், அந்த அறிவுறுத்தலை விஜய் தரப்பு ஏற்கவில்லை.

நீண்ட நேர காத்திருப்பு, போதுமான தண்ணீர் தர மறுத்தது. இயற்கை உபாதைகளுக்கு கூட பொதுமக்களை வெளியில் செல்ல அனுமதிக்காமல் கயிறு வைத்து ஈட்டி இருந்தது ஆகியவைதான் மூச்சுத்திணறலுக்கு காரணம் ஆகும்.

57

சொன்ன இடத்துக்கு சொன்ன நேரத்துக்கு வராதது யார் தவறு? அவரை சொன்ன நேரத்துக்கு வர வேண்டாம் என்று யாராவது தடுத்தார் களா? தடுத்து வைத்திருந்தார்களா? குறிப்பிட்ட இடத்தில் கூட்டம் அதிக மாக இருக்கிறது என்றால் முன்கூட்டியே பஸ் மீது ஏறி வந்திருந்தால் ஆங்காங்கே விஜயை பார்த்தவர்கள் கலைந்துச் சென்று இருப்பார் களே? அப்படி கலைந்து விடல் கூடாது என்பதுதானே அவரது திட்டம். திட்டம் போட்டு சாகடித்து விட்டார்கள்.

திருச்சியில் இருந்து கரூர் வரை விஜய் வாகனத்தை தொடர்ந்து செல்லுமாறு சில மாவட்ட ரசிகர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது அவர்கள்தான் தொடர்ந்து போக்குவரத்தை நிறுத்தி குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

67

நிகழ்ச்சி நடந்த இடம் கரூராக இருந்தாலும் இங்கு மற்ற மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் அழைத்து வர வைக்கப்பட்டுள்ளார்கள்.

உயிரிழந்தோர் பட்டியலில் திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அப்படியானால் திட்டமிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள் கூட்டத்தை அதிகரித்து காட்ட வெளியூர்க்காரர்கள் எத்தனை மணிக்கு சாப்பிட்டார்களோ தெரியவில்லை?

77

சொன்ன நேரத்துக்கு வரவிடாமல் திமுக. தடுக்கவில்லை. இத்தகைய கோரச் சம்பவம் நடந்த பிறகு கரூரை விட்டு அவரை யாரும் விரட்டவில்லை. அவர் இருந்திருக்க வேண்டியதுதானே? ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லாதது யார் குற்றம்?

இத்தகைய சூழல் அனைத்தையும் உருவாக்கிவிட்டு, அடுத்தவர் மீது பழிபோடுவது உயிர்பலியைப் போலவே கொடூரம் ஆனது ஆகும். பொய் முகத்தால் பிணவாடையை அமுக்க முடியாது.

Read more Photos on
click me!

Recommended Stories