சமையல் என்றாலே காய்கறிகள் தான் முக்கிய தேவையாக இருக்கும். அந்த வகையில் சாம்பார், கூட்டு, பொரியல் என எதுவாக இருந்தாலும் காய்கறிகள் அத்தியாவசியமாகும். காய்கறிகள் மனித உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஏனெனில் அவை ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவையாக உள்ளது.
தக்காளியானது சாம்பார், ரசம், குழம்பு, சட்னி, சூப், மற்றும் சாலட் தயாரிப்பில் முக்கிய பொருளாக உள்ளது. வைட்டமின் C, K, மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான லைகோபீன் உள்ளது. இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க தக்காளி பெரிதும் உதவுகிறது.