கடந்த நான்கு ஆண்டுகளில் 4,79,030 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தமாக ரூ.848.16/- கோடி சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2024-25 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய சுமார் 1,30,000 விவசாயிகளும் சேர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 6,09,030 கரும்பு விவசாயிகள் ரூ.1,145.12 கோடி சிறப்பு ஊக்கத்தொகை பெற்று பயன் அடைந்துள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில், சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரய நிலுவைத் தொகை வழங்க சுமார் 1,945.25/- கோடி வழங்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.