கரும்பு விவசாயிகளுக்கு ரூ.297 கோடி ஊக்கத்தொகை: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Published : Jun 30, 2025, 09:15 PM IST

2024-25 நிதியாண்டில் கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்.

PREV
14
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

கரும்பு விவசாயிகளின் நலன் கருதியும், சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349/- வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக ரூ.297 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

24
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயன்

இது குறித்து உணவுத்துறை அமைச்சர் கி. இ. கா. செம்மலையன் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் 16 கூட்டுறவு, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

அரசாணைப்படி, 2024-25 அரவைப் பருவத்தில், சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் இதனால் பயனடைவார்கள். இந்த சிறப்பு ஊக்கத்தொகை தகுதி வாய்ந்த கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

34
கரும்பு அரவைப் பருவம்

கடந்த நான்கு ஆண்டுகளில் 4,79,030 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தமாக ரூ.848.16/- கோடி சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2024-25 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய சுமார் 1,30,000 விவசாயிகளும் சேர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 6,09,030 கரும்பு விவசாயிகள் ரூ.1,145.12 கோடி சிறப்பு ஊக்கத்தொகை பெற்று பயன் அடைந்துள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில், சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரய நிலுவைத் தொகை வழங்க சுமார் 1,945.25/- கோடி வழங்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

44
சர்க்கரை ஆலைகளும் கரும்பு விவசாயிகளும்

கடந்த மாதம் (மே 2025) மட்டும் 12 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைச் சார்ந்த 5,920 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.97.77 கோடி கரும்பு கிரய தொகை வழங்கப்பட்டது. மேலும், கரும்பு சாகுபடியை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இது தொடர்ந்து 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories