விபத்து குறித்துத் தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பல மணி நேரம் போராடி, தீயணைப்பு வீரர்கள் பெரும் முயற்சிக்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் திடீரென காற்றாலை தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.