பள்ளிகளுக்கு ஜூலை 8ம் தேதி விடுமுறை! மாணவர்கள் கொண்டாட்டம்! சூப்பர் அறிவிப்பு!

Published : Jun 30, 2025, 06:16 PM IST

நெல்லையப்பர் தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் ஜூலை 8ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளும், அரசு அலுவலங்களும் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

PREV
13
Local Holiday For Nellai District On July 8

திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி திருவிழா இன்று (ஜூன் 30) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் வருகிற 8ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது.

23
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்

இந்நிலையில், நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு வரும் ஜூலை மாதம் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் உத்தட்ரவிட்டுள்ளார். இது தொர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ''திருநெல்வேலி மாவட்டம் மற்றும் வட்டம், திருநெல்வேலி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர் திருவிழா (ஆனி 24) 08.072025 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும். அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும். நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday நாளாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

33
உள்ளூர் விடுமுறை

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள், பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும். மேற்படி 08.072025 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வங்கிகளுக்கு விடுமுறை பொருந்தாது

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instrument Act 1881)-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. மேலும், இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.07.2025 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தெரிவித்துள்ளார்'' என்று கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories