பள்ளியில் மாணவர்களுக்கான பாதுகாப்பு
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் நிகழ்ந்தன, குறிப்பாககிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பள்ளி நிர்வாகி மற்றும் பள்ளி முதல்வர் மீது காவல் துறையால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 பள்ளிகளுக்கு அரசால் சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டு பள்ளி நிர்வாகம் சிறப்பு அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.