ஏன் விருது கொடுக்கப்பட்டது.?
அந்த வகையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், ஓ. பன்னீர்செல்வத்திற்கு "வித்யா பாரதி புரஸ்கார்" விருதினை ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் சன்னிதானம் ஜகத்குரு விதுசேகர பாரதி சுவாமிகள் வழங்கினார். இந்த விருது வழங்கும் விழாவில் பேசிய ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் சன்னிதானம் ஜகத்குரு விதுசேகர பாரதி சுவாமிகள், ஏன் ஒரு அரசியல்வாதியான பன்னீர்செல்வத்திற்கு இந்த விருது கொடுக்கப்பட்டது என கேட்கலாம். எத்தனையோ பேர் உள்ள போது இங்கு அவர் ஒரு அரசியல்வாதியாக வரவில்லை, சிஷயனாக இங்கு வந்துள்ளார் என தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.