கண்காணிப்பு தீவிரம்
இதனிடையே பல இடங்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் மாற்று நபர்களுக்கு குறைந்த சம்பளம் பேசி பள்ளியில் வேலைக்கு வைத்து கொள்ளவதாகவும், இது தமிழ் நாடு முழுவதும் நடைபெறுவதாகவும் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெறுவதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை, உட்கட்டமைப்பு வசதிகள், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.