மண்ணிலும், பொன்னிலும் முதலீடு செய்தால் என்றைக்கும் வீணாகாது என்பார்கள். அதற்கு ஏற்றார் போல தங்கம் விலையும், காலி மனைகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் இரண்டிலும் பொதுமக்கள் அதிகளவில் முதலீடு செய்து வாங்கி குவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக மக்கள் அதிகளவிலேயே இதை இரண்டையும் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். இதன் காரணமாகவே தங்கம் மற்றும் காலி மனையின் மீதான விலையும் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.