AIADMK: ஆட்டத்தை ஆரம்பித்த இபிஎஸ்! அமமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கியதால் அதிர்ச்சி! அவர் யார் தெரியுமா?

Published : Nov 06, 2024, 05:08 PM ISTUpdated : Nov 06, 2024, 05:19 PM IST

 டிடிவி தினகரன் அறிக்கை அரசியல் மட்டுமே செய்வதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைவதாக சிவபிரசாத் தெரிவித்தார்.

PREV
15
AIADMK: ஆட்டத்தை ஆரம்பித்த இபிஎஸ்! அமமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கியதால் அதிர்ச்சி! அவர் யார் தெரியுமா?

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிளவுபட்டது. பின்னர் அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்ட டிடிவி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

25

இந்நிலையில்  உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற மற்றும் நாளுடாளுமன்ற தேர்தலில் அமமுக எதிர்பார்த்த வெற்றியை பெற்றாமல் அடுத்தடுத்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் அக்கட்சியல் இருந்த முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி அதிமுக மற்றும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

35

இந்நிலையில், அமமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவர் யார் என்பதை பார்ப்போம்.

45

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியில் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளராக இருந்தவர் சிவ பிரசாத். இவர் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். இந்நிலையில், அமமுக மாவட்ட செயலாளராக இருந்த சிவ பிரசாத், அக்கட்சியிலிருந்து விலகி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி  இல்லத்தில், அவர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருடன்,  மாவட்ட துணைச்செயலாளர் சம்பத் குமார், ஒரு ஒன்றிய செயலாளர், இரண்டு பகுதி செயலாளர்கள், ஏழு வட்ட செயலாளர்கள், மற்றும் பல்வேறு அணி செயலாளர்களும் உடன் இணைந்தனர்.

55

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவ பிரசாத்:அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிக்கை அரசியல் மட்டுமே செய்வதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி களத்தில் எதிர்கட்சியாக சிறப்பாக செயல்படுவதால் தங்களை தாய் கழகமான அதிமுகவில் இணைத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories