ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கார்டில் மாற்றம் செய்வதற்காக தமிழக அரசு சூப்பர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் வருகிற நவம்பர் 9ஆம் ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்ய வழிவகை செய்துள்ளது. இந்த முகாமில் அனைத்து அதிகாரிகளும் ஒரே இடத்தில் இருப்பார்கள்.
அங்கு திருத்தங்கள் மேற்கொள்ள சென்றால் அலைய வேண்டிய அவசியம் இல்லாமல் உடனடியாக அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.