சாலையோரங்களில் அனைத்து வசதிகளோடு இலவச ஏசி ஓய்வறை.! சென்னையில் அசத்தப்போகுது மாநகராட்சி

Published : Apr 01, 2025, 08:33 AM IST

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்காக மாநகராட்சி ஏசி வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளை அமைக்க உள்ளது. முதற்கட்டமாக அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

PREV
15
சாலையோரங்களில் அனைத்து வசதிகளோடு இலவச ஏசி ஓய்வறை.! சென்னையில் அசத்தப்போகுது மாநகராட்சி

 Chennai food delivery AC rest rooms  : தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இருக்கிற இடத்தில் இருந்தே ஒரு பொருளை ஆர்டர் செய்ய முடியும். இதன் காரணமாக வீட்டுற்குள்ளே கறிவேப்பிலை முதல் கார்கள் வரை தேடி வரும் காலமாக உள்ளது. அந்த வகையில் நமக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்வதன் மூலம் வீட்டிற்கு ஒரு சில நிமிடங்களில் டெலிவரி செய்யப்படுகிறது.

எனவே இந்த உணவு டெலிவரி தொழிலில் லட்சக்கணக்கான இளைஞர்கள் இளம்பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு என தனி அலுவலகம், ஓய்வறை என எதுவும் இல்லாத காரணத்தால் சுட்டெரிக்கும் வெயிலிலேயே கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது.
 

25

ஸ்விக்கி, ஜோமேட்டோ ஊழியர்கள்

போக்குவரத்து நெரிசல், வெயில், மழை என்று பல்வேறு சூழ்நிலையிலும் அவர்கள் வேலை செய்கிறார்கள். இதற்கு தீர்வாக பொது இடங்களில் அவர்களுக்கான ஓய்வு வசதிகளுடன் ஓய்வு அறைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.  இதனை கருத்தில் கொண்டு  ஸ்விக்கி, ஜோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணிநேர உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்காக சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் சோதனை முறையில் சென்னை அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏ.சி வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படவுள்ளது. 

35

இலவச ஏசி ஓய்வறை

இந்த புதிய திட்டத்தால் ஆண் ஊழியர்களை விட  பெண் தொழிலாளர்கள் அதிகம் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.  சென்னை மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான ஓய்வு அறையில்,கழிவறை, குடிநீர், ஸ்மார்ட்ஃபோன் சார்ஜிங் செய்யும் வசதி, வேகமான இணையதள வசதி உள்ளிட்ட வசதிகள் இந்த அறையில் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

45

பெண் தொழிலாளர்களுக்கு பயன்

தற்போது உணவு டெலிவரி மற்றும் இ- காமர்ஸ் டெலிவரி தொழிலாளர்களில் தற்போது பெண்களும் அதிகளவில் உள்ளனர். அவர்கள் கழிவறைகளைப் பயன்படுத்துவதற்கே பெரும் சிரமம் அடையும் நிலை உள்ளது. குறிப்பாக உணவு மற்றும் இ- காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்களில் சுமார் 10 சதவீதம் பேர் பெண்களாவர். ஆகவே பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களுக்கு அத்தியாவசிய சேவை வழங்கும் விதமாகவும், ஏசி ஓய்வு அறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 

55

சோதனை அடிப்படையில் அறிமுகம்

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னையில் டெலிவரி சேவைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள என கூறியுள்ளார். சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories