நாளை பழனி முருகன் கோவிலில்! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்!

Published : Apr 01, 2025, 08:23 AM ISTUpdated : Apr 01, 2025, 08:27 AM IST

Palani Murugan Temple: உலக பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துதள்ளது.

PREV
15
நாளை பழனி முருகன் கோவிலில்! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்!
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில்

உலக புகழ் பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் திருக்கோவில். இக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்டவை விசேஷ நாட்களாகும். இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்கின்றனர். அதுவும் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சாமியை தரிசனம் செய்ய மணி நேரம் ஆகிவிடம். மேலும் பழனி கோயிலில் மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால் உலக புகழ் பெற்ற பஞ்சாமிர்தம். 

25
பழனி மலை கோவில்

இந்நிலையில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் வயதானவர்கள் மற்றும் சிறுவர்கள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளவர்கள் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மலைகளின் அரசி ஊட்டி, கொடைக்கானலுக்கு இ பாஸ் கட்டாயம்; ஏப்ரல் 1 நாளை முதல் அமல்!

35
ரோப் கார் சேவை

ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் 3 நிமிடத்தில் செல்வது மட்டுமல்லாமல் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், பெரும்பாலானோர் ரோப் காரில் செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். 

45
பராமரிப்பு பணி

இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி ஏப்ரல் 2ம் தேதி அதாவது நாளை ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

இதையும் படிங்க:  கனமழைக்கு நாள் குறித்த வானிலை! எந்தெந்த மாவட்டங்களில் ஊத்தப்போகுது தெரியுமா?

55
ரோப் கார் சேவை நிறுத்தம்

ஆகையால் ரோப் கார் சேவை நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி முருகனை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories