தமிழகத்தில் இந்த ஆண்டு மே 4ம் தேதி கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. கத்திரி வெயில் எப்போது தொடங்கியதோ அன்று முதல் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் கத்திரி வெயில் கடந்த மே மாதம் 28ம் தேதி முடிந்ததது. இதனால் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
25
சுட்டெரிக்கும் வெயில்
அதாவது கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். நேற்று தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.36 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவானது.
35
10 இடங்களில் சதம் அடித்த வெயில்
மதுரை விமான நிலையம் - 104.36 டிகிரி, மதுரை நகரம் - 102.92 டிகிரி, வேலூர் - 102.74 டிகிரி, தஞ்சாவூர் - 102.2 டிகிரி, சென்னை மீனம்பாக்கம் - 101.84 டிகிரி, ஈரோடு - 101.48 டிகிரி, திருத்தணி - 101.3 டிகிர, திருச்சி - 100.94 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம் - 100.58 டிகிரி, பரங்கிப்பேட்டை - 100.4 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பதை சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
55
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்று முதல் நாளை வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.